Home மலேசியா வெளிநாட்டினர் உள்ளூர் அரிசியை வாங்க அனுமதிக்க வேண்டாம் என்கிறார் மலாக்கா Exco

வெளிநாட்டினர் உள்ளூர் அரிசியை வாங்க அனுமதிக்க வேண்டாம் என்கிறார் மலாக்கா Exco

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசியை மலேசியர்களுக்கு மட்டுமே வாங்குவதை கட்டுப்படுத்த வேண்டும் என மலாக்கா நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். உள்ளூர் வெள்ளை அரிசியின் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு இத்தகைய கொள்கை அவசியம் என்று மலாக்கா கிராமப்புற வளர்ச்சி, விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புக் குழுத் தலைவர் டாக்டர் அக்மல் சலே கூறினார்.

உள்ளூர் அரிசிக்கு அரசால் மானியம் வழங்கப்படுகிறது. எனவே சந்தையில் வரத்து குறையும் போது, வெளிநாட்டினரை விட (உள்ளூர் அரிசியை வாங்க) உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மலேசியா முழுவதும் இதை அமைச்சகம் அனுமதிக்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் மலாக்காவில் அதை செயல்படுத்த முடியும் என்று அம்னோ இளைஞர் தலைவரான அக்மல் ஒரு முகநூல் பதிவில் கூறினார்.

அரிசி விநியோக சந்தையில் ஏற்படும் இடையூறுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில், ஒரு வாடிக்கையாளருக்கு 100 கிலோ வரையிலான உள்ளூர் வெள்ளை அரிசியை விற்பனை செய்வதற்கான கட்டுப்பாட்டை வேளாண் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகம் கடந்த வாரம் அறிவித்தது. சில வர்த்தகர்கள் உள்ளூர் வெள்ளை அரிசியை 7,000 கிலோகிராம் வரை கொள்வனவு செய்வதாக கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. உள்ளூர் வெள்ளை அரிசி விநியோகம் சீராகும் வரை கொள்முதல் வரம்பு விதிக்கப்படும்.

நாட்டில் வெள்ளை அரிசி உற்பத்தி இன்னும் ஒரு மாதத்துக்குள் மீண்டு வரும் என்று செப்டம்பர் 5ஆம் தேதி வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் முகமட் சாபு நம்பிக்கை தெரிவித்தார். குறுகிய கால நடவடிக்கையாக அரிசி ஆலைகள் உற்பத்தியை 20% அதிகரிக்குமாறு அமைச்சின் விசேஷ வேலைத்திட்டத்தின் கீழ் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version