Home உலகம் சிங்கப்பூரின் 9ஆவது அதிபர் தர்மன் சண்முகரத்தினத்திற்கு மாமன்னர் வாழ்த்து

சிங்கப்பூரின் 9ஆவது அதிபர் தர்மன் சண்முகரத்தினத்திற்கு மாமன்னர் வாழ்த்து

கோலாலம்பூர்: சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராக வியாழக்கிழமை (செப்டம்பர் 14) பதவியேற்ற தர்மன் சண்முகரத்தினத்திற்கு மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா வெள்ளிக்கிழமை (செப். 15) வாழ்த்து தெரிவித்தார்.

மலேசியா மற்றும் சிங்கப்பூர் இரு நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும் முன்னேற்றத்தையும் செழிப்பையும் கொண்டு வருவதற்கு நெருக்கமாக தொடர்ந்து பணியாற்றும் என்று மாமன்னர் தனது முகநூல் பதிவில் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆழமான வரலாற்று உறவுகளைக் கொண்ட இரு அண்டை நாடுகளான மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவை பரஸ்பர நலனுக்காக பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றும் அவரது மாட்சிமை நம்பிக்கை தெரிவித்தார் என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

சண்முகரத்தினம் செப்டம்பர் 1 அன்று நடந்த ஜனாதிபதித் தேர்தலில் 2.5 மில்லியன் வாக்குகளில் 70% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.ந்வியாழன் அன்று அரச தலைவராக தனது முதல் உரையில், சண்முகரத்தினம் சிங்கப்பூரை பிரதிநிதித்துவப்படுத்தவும் அரசாங்கத்தின் நோக்கங்கள் மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப வெளிநாடுகளில் குடியரசின் நலன்களை மேம்படுத்தவும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version