காஜாங் வட்டாரத்தில் செப்டம்பர் 13 ஆம் தேதி கம்போங் பாடாங், பத்து 20 1/4 இல் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் காணாமல் போனதாகக் கூறப்படும் படிவம் மூன்று மாணவி, நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைமை உதவி ஆணையர் முகமட் ஜெய்த் ஹசன் கூறுகையில் 15 வயது மாணவி செமினி பகுதியில் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறினார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விசாரணையின் அடிப்படையில், குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது. கடந்த வெள்ளியன்று, ஹரியான் மெட்ரோ, நூர் ஷஃபினா மைசாரா அப்துல்லா, கம்போங் பாடாங்கின் பத்து 20 1/4 இல் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் காணாமல் போனதாக அறிவித்தது.