Home மலேசியா திட்டம் தோல்வியடைந்ததால் கடத்தப்பட்ட வெளிநாட்டு பெண்ணை போலீசார் மீட்டனர்

திட்டம் தோல்வியடைந்ததால் கடத்தப்பட்ட வெளிநாட்டு பெண்ணை போலீசார் மீட்டனர்

கோலாலம்பூர்: ஒரு திட்டம் நிறைவேறாததால் அதிருப்தி அடைந்த, தனிநபர்கள் சிலரால் கடத்தப்பட்ட வெளிநாட்டுப் பெண்ணை போலீசார் மீட்டுள்ளனர். புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன், சம்பந்தப்பட்ட பெண்ணை சிலாங்கூர் மற்றும் பினாங்கு காவல்துறை தலைமையகத்தின் உதவியுடன் புக்கிட் அமான் சிஐடியின் குழு மீட்டது என்றார்.

பாதிக்கப்பட்டவர் சிலாங்கூரில் எங்கோ கடத்தப்பட்டு பினாங்குக்குக் கொண்டு செல்லப்பட்டு காவல்துறையால் மீட்கப்பட்டதாக அவர் கூறினார். வெளிநாட்டு தொழிலதிபர் ஒருவரின் குடும்ப உறுப்பினர் கடத்தப்பட்டது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

வெளிநாட்டு பிரஜை ஒரு வணிகத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டது. ஆனால் அது பாதியில் கைவிடப்பட்டதால் அவரது குடும்ப உறுப்பினர் கடத்தப்பட்டார் என்று அவர் இன்று புக்கிட் அமானில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். இந்த சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்களை பினாங்கு காவல்துறை தலைவர் டத்தோ காவ் கோக் சைனாட் நாளை செய்தியாளர் சந்திப்பில் விவரிப்பார் என்று ஷுஹைலி கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version