நிபோங் தெபால்:
பருவமழை நெருங்கி வரும் நிலையில், நாட்டில் ஏற்படும் வெள்ளத்தை எதிர்கொள்ள கல்வி அமைச்சகம் தயாராக உள்ளது.
கல்வி அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை குழு செயலகத்துடன் எப்போதும் தொடர்பில் இருப்பதாகவும், வெள்ளம் உள்ளிட்ட எந்தப் பேரிடரையும் எதிர்கொள்வதில் இணைந்து செயல்படுவதாகவும் அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்பட்டால் நிவாரண மையங்களாக பயன்படுத்தப்படக்கூடிய பள்ளிகள் உட்பட, வெள்ளத் தயாரிப்புகளுக்கான வழிமுறையை அமைச்சகம் இறுதி செய்துள்ளது என்று அவர் கூறினார்.
நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 23), பேராக், சபா மற்றும் சரவாக் ஆகிய மூன்று மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன, இதன் விளைவாக நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் தற்காலிக நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.