Home Top Story நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது சிறுமி மரணம் – பார்த்துக்கொண்டிருந்த சகோதரன் கைது

நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது சிறுமி மரணம் – பார்த்துக்கொண்டிருந்த சகோதரன் கைது

காஜாங்:

கடந்த செப்டம்பர் 13 அன்று பாங்கியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்த, சிறுமியின் ஒன்றுவிட்ட சகோதரனான 26 வயது இளைஞரை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.

நான்கு வயது சிறுமி நீரில் மூழ்கிய சம்பவ இடத்தில் இருந்த CCTV கேமரா காட்சிகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவுக்காரனான குறித்த வாலிபர் இருந்ததையும், அவர் அச்சிறுமியைக் காப்பாற்ற முயற்சி செய்யாது அச்சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்ததையும் காட்டுகிறது என்றும், அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஜைத் ஹாசன் கூறினார்.

இந்த வழக்கு ஆரம்பத்தில் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டது, தற்போது குழந்தைகள் சட்டம் 2001 பிரிவு 31(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் தற்போது CCTV காட்சிகளின் அடிப்படையில் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version