Home தமிழ்ப்பள்ளி 10 மாணவர்களுக்கும் குறைவான 26 தமிழ்ப்பள்ளிகளை காப்பாற்றும் முயற்சி

10 மாணவர்களுக்கும் குறைவான 26 தமிழ்ப்பள்ளிகளை காப்பாற்றும் முயற்சி

தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும்   பிரச்சினை குறிப்பாக குறைவான மாணவர்கள் உள்ளிட்ட சில பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க தமிழ்ப்பள்ளிகளின் தன்னார்வ தொண்டு கூட்டமைப்புடனான சந்திப்பு கூட்டத்தில் மனிதவளத் துறை அமைச்சர் வ.சிவகுமார் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நாடு முழுவதும் 26 தமிழ்ப்பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்களே இருக்கின்றனர் என்பது குறித்து பேசப்பட்டது.

அவை பேராக்கில் 10 பள்ளிகள், கெடாவில் 6 பள்ளிகள், பகாங்கில் 4 பள்ளிகள், சிலாங்கூரில் 3 பள்ளிகள், ஜோகூரில் 2 பள்ளிகள் மற்றும் நெகிரி செம்பிலானில் 1 பள்ளியாகும்.

கடந்த 40 ஆண்டுகளில், இந்திய சமூகம் கிராமங்கள் மற்றும் தோட்டங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளது. இந்தியர்கள் கிட்டத்தட்ட 89% இப்போது நகரங்களில் வாழ்கின்றனர். இருப்பினும், 67% தமிழ்ப்பள்ளிகள் இன்னும் தோட்டங்களிலும் கிராமப்புறங்களிலும் உள்ளன. இவற்றில் 62% பள்ளிகள் தோட்டத்திற்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளன.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண தமிழ்ப்பள்ளி தன்னார்வ தொண்டு நிறுவனத்திடமிருந்து எனக்கு ஒரு ஆலோசனை கிடைத்தது. நான் கவனத்தில் கொண்டேன். பின்னர் ஒரு கூட்டத்தில் இந்த விஷயத்தை கல்வி அமைச்சருடன் விவாதத்திற்கு கொண்டு வருவேன். இந்திய சமுதாயத்தின் கல்வி மேம்பாட்டிற்காக கடுமையாக உழைக்கும் தமிழ்ப்பள்ளிகள் கூட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன் என்றார் அமைச்சர் சிவகுமார்.

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version