அரிசி இறக்குமதியாளர் Padiberas Nasional Bhd (Bernas) தனது அரிசி தயாரிப்புகள் பிளாஸ்டிக் அரிசியுடன் கலக்கப்பட்டதாக வைரலான வீடியோவில் கூறப்பட்டதை மறுத்துள்ளது. அதன் இறக்குமதி மற்றும் உள்ளூர் விநியோகம் ஆகிய இரண்டிற்கும் அரிசி கொள்முதல் ஒவ்வொரு கட்டத்திலும் கடுமையான தரக் கண்காணிப்புடன், சான்றிதழின் தரங்களுடன் உயர் மட்ட இணக்கத்தை தொடர்ந்து உறுதி செய்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் சந்தையில் பிளாஸ்டிக் அரிசி உள்ளது என்ற கூற்றுக்கு பதிலளிக்கும் விதமாக, இறக்குமதி செய்யப்படும் அரிசி உண்மையானது மற்றும் பொது நுகர்வுக்கு பாதுகாப்பானது என்று பெர்னாஸ் உறுதியளிக்கிறது என்று அது கூறியது. கடந்த வாரம், சமைத்த அரிசியில் பிளாஸ்டிக் போன்ற பொருள்களை சித்தரிக்கும் காணொளி பதிவில், தற்போதைய அரிசி தட்டுப்பாட்டிற்கு மத்தியில் உள்ளூர் சந்தையில் கிடைக்கும் அரிசியின் தரம் குறித்த கவலையைத் தூண்டியது.
போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்திய பெர்னாஸ், நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்றும் கூறியது.
பொதுமக்கள் அவர்கள் வாங்கிய பெர்னாஸின் அரிசி பொருட்களில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான கூறுகள் இருந்தால்,information@bernas.com.my.க்கு அதிகாரப்பூர்வ புகாரை அனுப்புமாறு கேட்டுக் கொண்டது.