கோலாலம்பூர்:
ஜாலான் கியாரா, புக்கிட் கியாராவில் உள்ள கட்டுமானத் தளத்தில் மொத்தம் 32 கட்டுமானத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர் அத்தோடு அக்கட்டுமானத் தளத்தை மூடவும் உத்தரவிடப்பட்டது.
மலேசிய குடிநுழைவுத் துறை (JIM), தேசிய போலீஸ் படை (PDRM), கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியம் (CIDB), திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுச் சுத்திகரிப்புக் கழகம் (SWCorp) மற்றும் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை, மலேசிய வேலைவாய்ப்பு நிறுவனம் (DOSH) ஆகியவற்றுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் (DBKL) தெரிவித்துள்ளது.
“இந்த சோதனையில் 24 பங்களாதேஷ் பிரஜைகள், 7 இந்தோனேசிய பிரஜைகள் மற்றும் ஒரு இந்திய பிரஜை ஆகியோர் உட்பட மொத்தம் 32 கட்டுமானத் தொழிலாளர்கள் பயண ஆவணங்கள் மற்றும் தொடர்புடைய பணி அனுமதி தொடர்பான விரிவான ஆய்வுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் ” என்று DBKL தனது பேஸ்புக்கில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.