சிலாங்கூர் மாநிலத்தில் ஷா ஆலாம் ஸ்ரீ மூடா ஸ்ரீ சுவர்ண மஹா மாரியம்மன் கோவிலில் நேற்று நவராத்திரி 2ஆம் நாள் பூஜை வழிபாடுகள் மிகச்சிறப்பாக நடை பெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந் திருந்தனர்.
நவராத்திரியின் இரண்டாம் நாளில் ராஜ ராஜேஸ்வரியாக அம்பிகையை அலங் கரித்து, கட்டம் வகையிலான கோலம் போட்டு வழிபட வேண்டும். மலர்களில் முல் லையும், இலைகளில் மருவும் கொண்டு அன்னையை அர்ச்சித்து வழிபட வேண்டும். நைவேத்தியம் புளிசாதமும், சுண்டல் வகையில் வேர்க்கடலை சுண்டலும் படைத்து வழிபட வேண்டும். பழங்களில் மாம்பழமும் படைக்க வேண்டும். இந்த நாளில் கல் யாணி ராகத்தில் அமைந்த பாடல்கள் பாடி அன்னையை மகிழ்விக்க வேண்டும். அன் னைக்கு மஞ்சள் நிற வஸ்திரம் அணிவித்து அலங்கரிக்க வேண்டும். நாமும் மஞ்சள் நிற உடை அணிந்து கொண்டு வழிபாடு செய்யலாம்.
கல்வி, ஞானம், அறிவு, மனதில் தைரியம் கிடைக்கும். மனதில் உள்ள கவலைகள் எது வாக இருந்தாலும் அதை நீக்கக் கூடியது நவராத்திரியின் இரண்டாம் நாள் வழிபாடு. நினைத்த காரியங்களை நிறைவேற்றி தரக் கூடியவள் அன்னை ராஜ ராஜேஸ்வரி.
ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம் படித்து அம்பிகையை வழிபடலாம். ராஜ ராஜேஸ்வரி அம் மனை மனதார நினைத்து ” ஓம் ராஜராஜேஸ்வரியே நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து, அர்ச்சனை செய்து வழிபடலாம். நவதுர்க்கைகளில் பிரம்மச்சாரிணி தேவிக்குரிய தியான மந்திரமான,
“ததாநகர பத்மபியம் அக்ஷமாலா கமண்டலம்
தேவி பிரசிதட்டு மயி பிரம்மசாரின நுத்தம் “
என்ற மந்திரத்தை இரண்டு நெய்விளக்குகள் ஏற்றி வைத்து, 11 முறை சொல்லி வழிபடலாம்.