நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை தடுக்கவே, தமிழ்நாடு அரசு நெருக்கடி கொடுப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
லியோ திரைப்படம் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் காலை 9 மணி முதல் 5 காட்சிகள் திரையிடலாம் என்று தமிழ்நாடு அரசு கூறியது. ஆனால் அதிகாலை 4 மணி முதல் திரையிட அனுமதி வழங்க வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, காலை 4 மணி காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து உள்துறை செயலாளர் அமுதாவை, லியோ திரைப்பட தயாரிப்பாளர் தரப்பு வழக்கறிஞர்கள் சந்தித்துள்ளனர்.
ஆனால் ஜெயிலர் படத்திற்கும் அதிகாலை 4 மற்றும் காலை 7 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.