Home Top Story ஜோகூர் அடுக்குமாடிக் குடியிருப்பின் மின்தூக்கியில் கொள்ளை; உள்ளூர் ஆடவர் கைது

ஜோகூர் அடுக்குமாடிக் குடியிருப்பின் மின்தூக்கியில் கொள்ளை; உள்ளூர் ஆடவர் கைது

ஜோகூர்:

ஜோகூர் பாருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மின்தூக்கியில் பதின்மவயது வாலிபர் ஒருவர் கொள்ளையடிக்கப்பட்டபோது அவர் கவலையான தருணங்களை எதிர்கொண்டார்.

நேற்று காலை 11 மணியளவில், அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் ஹெல்மெட் அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட 43 வயது கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5.25 மணியளவில் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் சம்பவம் குறித்து புகாரளித்ததை அடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெற்கு ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் ராவூப் செலாமாட் தெரிவித்தார்.

குறித்த பதின்மவயது வாலிபனிடமிகைத்தொலைபேசி, ஒரு ஜோடிக் காலனி உட்பட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபரின் சிறுநீர் பரிசோதனையில் மார்பின் போதைப்பொருள் இருப்பது உறுதியானது என்றும், குற்றவியல் சட்டத்தின் 392வது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version