Home Hot News பாலஸ்தீனத்திற்கான நீதி கோரி அமைதிப் பேரணி; ஆயிரக்கணக்கானோர் கூடினர்

பாலஸ்தீனத்திற்கான நீதி கோரி அமைதிப் பேரணி; ஆயிரக்கணக்கானோர் கூடினர்

கோலாலம்பூர்:

இன்று ஞாயிற்றுக்கிழமை (அக். 22) Dataran Merdeka வில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும் அவர்களுக்கு நடைபெறும் கொடுமைகளில் இருந்து காப்பாற்ற உலக நாடுகள் முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும் நடைபெற்ற அமைதிப் பேரணியில் ஏராளமானோர் திரண்டனர்.

அரச சார்பற்ற நிறுவனங்கள் Viva Palestina Malaysia (VPM) மற்றும் Humanitarian Care Malaysia (MyCARE) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட “பாலஸ்தீனத்திற்கான சுதந்திரம்” என்ற கருப்பொருளில் நடந்த பேரணியில் வெளிநாட்டினர் உட்பட அனைத்து இனங்களின் ஆதரவாளர்களும் காலை 9 மணிக்கே வந்திருந்தனர்.

பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆர்வலர்கள் இஸ்ரேல்-பாலஸ்தீன மோத லுக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு விடுத்தனர். மதியம் 1 மணிக்கு நிறைவடையும் பேரணியை பணியில் இருக்கும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version