Home Top Story தெலுக் இந்தானில் திடீர் வெள்ளம் ; 50 குடியிருப்பாளர்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றம்

தெலுக் இந்தானில் திடீர் வெள்ளம் ; 50 குடியிருப்பாளர்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றம்

ஈப்போ:

ற்று நீர் திடீரென பெருக்கெடுத்து ஓடியதால், தெலுக் இந்தானின் சங்காட் ஜாங்கில் உள்ள 16 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர், டேவான் செர்பகுனா பாடாங் தெம்பாக்கிலுள்ள வெள்ள நிவாரண மையத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

“முஅல்லிமில் உள்ள பாடாங் படாங்கில் ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் நள்ளிரவு வரை பெய்த கனமழையால் பிடோர் ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்தது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

நேற்று மாலை 7 மணிக்கு குறித்த நிவாரண மையம் திறக்கப்பட்டது என்று கூறிய அவர், இன்று காலை 7.30 மணி நிலவரப்படி சுங்கை பிடோரின் நீர் மட்டம் 4.13 மீற்றர் அளவில் அபாய அளவில் காணப்படுவதாகவும், அப்பகுதியில் நல்ல வானிலை நிலவுவதாகவும் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version