ஈப்போ:
பேராக்கில் வெள்ள நிலைமை சீரடைந்து வருவதைத்ததோடர்ந்து, அங்கு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று சனிக்கிழமை தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் எண்ணிக்கை 263 பேராக இருந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி நிலவரப்படி அங்குள்ள இரண்டு நிவாரண மையங்களில் 81 பேர் மட்டுமே தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று பேராக் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் (JPBN) தெரிவித்துள்ளது.