Home Hot News சாலைகளில் திடீர் வெள்ளப்பெருக்குத் தடுப்பு நடவடிக்கை முன்னெடுப்பு ஷா ரெட்ஸான் தகவல்

சாலைகளில் திடீர் வெள்ளப்பெருக்குத் தடுப்பு நடவடிக்கை முன்னெடுப்பு ஷா ரெட்ஸான் தகவல்

எம். அன்பா

காஜாங்:

சுங்கை தங்காஸ் சாலையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக அச்சாலை மறுசீரமைப்பு செய்யப்பட்டு தரம் உயர்த்தப்படும் என்று பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷா ரெட்ஸான் ஜொஹான் கூறினார்.

கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழை காரணமாக இச்சாலையின் சில பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இச்சாலை வழியில் முறையான கால்வாய் அமைக்கப்படாததால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

இச்சாலையில் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்தும் நோக்கில் அடுத்தாண்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். 3.5 கிலோ மீட்டர் நீளமுள்ள இச்சாலையை 92 மில்லியன் ரிங்கிட் ஙெ்லவில் சிலாங்கூர் மாநில பொதுப்பணி இலாகா சீரமைத்து தரம் உயர்த்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்காக விரைவில் டெண்டர் கோரப்படும் என்று குறிப்பிட்ட அவர், சிலாங்கூர் மாநில பொதுப்பணி இலாகா, உலுலங்காட் பொதுப்பணி அலுவலகம், காஜாங் நகராண்மைக்கழகம், சிலாங்கூர் மாநில புறநகர் மேம்பாட்டு வளர்ச்சி அமலாக்கத்துறை ஆகிய அனைத்துத் தரப்பினரும் இந்தப் பணிகளை முன்னெடுப்பர். அச்சாலையை ஷா ரெட்ஸான், அமலாக்கத் தரப்பினர், காஜாங் கவுன்சிலர் கிம் ஆகியோருடன் இணைந்து ஆய்வு ஙெ்ய்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version