Home மலேசியா மாமன்னர்: மலேசியாவில் அமைதி, சுதந்திரம் ஆகியவற்றிக்கு நன்றியுடன் இருங்கள்

மாமன்னர்: மலேசியாவில் அமைதி, சுதந்திரம் ஆகியவற்றிக்கு நன்றியுடன் இருங்கள்

கோலாலம்பூர்: நாடு இன்று அனுபவிக்கும் அமைதி மற்றும் சுதந்திரத்திற்காக மலேசியர்கள் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல் முஸ்தபா பில்லா ஷா கூறினார். அமைதி மற்றும் சுதந்திரத்தின் ஆசீர்வாதங்கள் பகைமையின் தீப்பிழம்புகளைத் தூண்டும் விவாதங்களால் சிதைக்கப்படக்கூடாது, ஏனெனில் மோதல்கள் மற்றும் போர்கள் ஒரு தேசத்தின் கனவுகளையும் எதிர்காலத்தையும் அழித்து இறுதியில் ஒட்டுமொத்த சமூகத்தையும் அழிக்கும் என்று கூறினார்.

இளம் தலைமுறையின் எதிர்காலத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் பல நெருக்கடிகளை உலகம் கையாள்கிறது. எனது கருத்துப்படி, ஆயுத மோதல்கள், போர் மற்றும் முரண்பாடுகள் இளைய தலைமுறை மற்றும் உலகத்தின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.

“… 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததிலிருந்து, உலகின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மோதல்கள், சச்சரவுகள் மற்றும் போர்கள் காரணமாக உலகம் ஒருபோதும் அமைதியாக இருந்ததில்லை. பேரழிவு தரும் சொத்து அழிவு, மில்லியன் கணக்கான உயிர்கள் இழப்பு, மனிதாபிமான மோதல்கள் மற்றும் உலகின் சுற்றுச்சூழல் அமைப்பின் அழிவுகள் இருந்தபோதிலும், மக்கள் வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்று கோலாலம்பூர் பல்கலைக்கழகத்தில் (UniKL) அவர் தனது அரச உரையில் 204ஆவது பட்டமளிப்பு விழாவில் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version