முன்னதாக பி.ஆர். ராஜன் மக்கள் ஓசையின் மக்கள் பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து டத்தோ கோபி ஆயர் சிலாங்கூர் உயர் அதிகாரிகளுக்கு நல்வரவு கூறி இந்த ஆதரவும் ஒத்துழைப்பும் என்றும் நீடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து இஸாட் இஸ்மாயில், எலினா பஸ்ரி, முகமட் அஷ்ராஃப் ஆகியோர் இனிப்புப் பதார்த்தங்களை வழங்கி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.