Home மலேசியா மங்கோலிய அழகி கொலை வழக்கு: மாநில மன்னிப்பு வாரியத்தின் முடிவுக்காக காத்திருக்கும் முன்னாள் போலீஸ் அதிகாரி

மங்கோலிய அழகி கொலை வழக்கு: மாநில மன்னிப்பு வாரியத்தின் முடிவுக்காக காத்திருக்கும் முன்னாள் போலீஸ் அதிகாரி

2016இல் மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபுவை கொலை செய்த வழக்கில், முன்னாள் போலீஸ் அதிகாரி அஜிலா ஹத்ரி, மாநில மன்னிப்பு வாரியத்தின் முடிவுக்காக காத்திருக்கிறார். உத்துசான் மலேசியா அறிக்கையின்படி, சுங்கை பூலோ சிறையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கடைசிக் கைதியாக முன்னாள் சகாவான சிருல் அசார் உமருடன் தண்டிக்கப்பட்ட அஸிலா ஆவார். கடந்த செப்டம்பரில் காஜாங் சிறையிலிருந்து சுங்கை பூலோ சிறைக்கு மாற்றப்பட்ட பிறகு அவர் (அஜிலா) இறுதிக் கைதியாக இருக்கிறார் என்று மலாய் நாளிதழ் ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டியது.

நேற்று, போலீஸ் படைத்தலைவர் ரஸாருதீன் ஹுசைன் பெர்னாமாவிடம், சிருல் ஆஸ்திரேலியா சிட்னி, காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறினார்.  மலேசிய காவல்துறைக்கு ஆஸ்திரேலியாவில் அதிகாரிகள் இருப்பதாகவும், அவர் சுதந்திரமாக இருப்பதால் உண்மையில் சிருலை கண்காணிக்க முடியும் என்றும் ரஸாருதீன் கூறினார்.

இதற்கிடையில், சிருலை திருப்பி அனுப்புவது குறித்து விரைவில் அரசு முடிவு எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார். சிருல் 2006 இல் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் சென்று, 2015 இல் கூட்டரசு நீதிமன்றத்தால் மரண தண்டனையை உறுதி செய்வதற்கு முன்பு அங்கு தஞ்சம் கோரினார். அதே நேரம் அஜிலாவிற்கு  மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் மலேசிய மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்களை உள்ளடக்கியிருப்பதால், சிருலின் நாடு திரும்புவதற்கான விண்ணப்பம் சட்டத்துறைத் தலைவரால் கையாளப்படும் என்று ரஸாருதீன் கூறினார்.

ஆஸ்திரேலிய குடிவரவு காவலில் இருந்து சிருல் விடுவிக்கப்பட்டார். நவம்பர் 8 அன்று ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் நாடு கடத்த முடியாத குடிமகன் அல்லாத கைதிகளை குடியேற்ற அதிகாரிகளால் காலவரையின்றி காவலில் வைக்க முடியாது என்ற தீர்ப்பைத் தொடர்ந்து. சிருல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் அவரை ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்த மலேசியா கோரியுள்ளது.

மரண தண்டனையை எதிர்நோக்கும் எவரையும் அவர்களது சொந்த நாட்டில் நாடு கடத்துவதை தனது சட்டம் தடை செய்கிறது என்று ஆஸ்திரேலியா கூறியுள்ளது. இருப்பினும், மலேசியா கட்டாய மரண தண்டனையை ரத்து செய்துள்ளது மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மறுஆய்வுகள் கூட்டரசு நீதிமன்றத்தால் கையாளப்படுகின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version