கோலாலம்பூர்:
பெர்சாத்து கட்சி உறுப்பினர்கள் 16வது பொதுத் தேர்தல் வரை அக்கட்சியில் நீடிக்க முடியும் என்பதில் நம்பிக்கை இல்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
“ஜன விபாவா போன்ற பெரிய வழக்குகளுக்கான குற்றச்சாட்டுகள் மற்றும் அதன் விளைவுகளில் இருந்து பெர்சாத்து மீண்டும் எழ முடியும் என்றும், ஒருவேளை, பெர்சாத்து அடுத்த பொதுத் தேர்தல் வரை கூட நீடிக்காமல் போகலாம்” என்றார் அவர்.
4 பெர்சாத்து உறுப்பினர்கள் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், மேலும் ஐந்து பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அறிவிப்பார்கள் என்றும், இது மிகவும் கவலையளிப்பதாகவும் அவர் கூறினார்.