சென்னை:
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அமீர் கான் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் இது குறித்து அறிந்து முதல் ஆளாக வந்து நடிகர் அஜித் உதவியுள்ளார்.
அதே பகுதியில் தன்னுடைய தாயாரின் சிகிச்சைக்காக அங்கு தங்கி இருந்த பாலிவுட் நடிகர் அமீர் கானும் விஷ்ணு விஷாலுடன் சிறிய படகு மூலம் வெளியேறினார்.
இந்தச் செய்தி அறிந்து நடிகர் அஜித், விஷ்ணு விஷால் மற்றும் அமீர் கானைச் சந்தித் துள்ளார். மேலும் அவர்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல அஜித் வாகனம் ஏற் பாடு செய்து உதவியுள்ளார். இந்தத் தகவலை விஷ்ணு விஷால் அஜித்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.