Home மலேசியா வேலையின்மை விகிதத்தை மூன்று விழுக்காடு குறைக்க இலக்கு- மனிதவள அமைச்சர் அறிவிப்பு

வேலையின்மை விகிதத்தை மூன்று விழுக்காடு குறைக்க இலக்கு- மனிதவள அமைச்சர் அறிவிப்பு

புக்கிட் ஜாலில்:

இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட 3.4 விழுக்காடுடன் ஒப்பிடுகையில் மனித வள அமைச்சு (KSM) அடுத்த ஆண்டு வேலையின்மை விகிதத்தை மூன்று சதவீதமாகக் குறைக்க இலக்கு வைத்துள்ளது.

ஒரு வருடத்திற்குள் இலக்கை எட்ட முடியும் என்று மனிதவள அமைச்சர் அமைச்சர் வ. சிவக்குமார் தெரிவித்தார்.

“அடுத்த ஆண்டு மூன்று சதவீதமாக குறைப்பு இலக்கு பொருளாதார சூழலில் நல்லது மற்றும் அந்த விகிதம் முழு வேலைவாய்ப்பை அடைய கணக்கிடப்படுகிறது என்று புக்கிட் ஜாலில் வளாகத்தில் நடைபெற்ற மடானி அரசாங்கத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழாவிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.

நேற்று புக்கிட் ஜாலில் நேஷனல் ஸ்டேடியம் மைதானத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் மடானிஅரசாங்கத்துடன் ஓர் ஆண்டு நிறைவு விழாவில் மனித வள அமைச்சர் சிவக்குமார் கலந்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகளின் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க, தொழில்முறை துறையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதில் தனது அமைச்சு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version