Home உலகம் தூக்கத்தைக் கெடுத்ததற்காக வெளிநாட்டவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை!

தூக்கத்தைக் கெடுத்ததற்காக வெளிநாட்டவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை!

குளுவாங்:

நேற்றுக் காலை பிளாட் ஹாஜி மனன் என்ற இடத்தில், தனது தூக்கத்தைக் கெடுத்ததற்காக வங்காளதேஷ் நாட்டு பிரஜை ஒருவர் தனது சக நாட்டவரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட முகமட் சோபுஜ், 28, என்றார் ஆடவர் ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்தார், அவரது தலை மற்றும் கழுத்தில் கூறிய ஆயுத்தத்தால் குத்திய காயங்கள் இருந்தன என்று, குளுவாங் காவல்துறைத் தலைவர் பஹ்ரின் நோ கூறினார்.

“காலை 10 மணியளவில், வங்காளதேஷ் பிரஜை ஒருவரிடமிருந்து போலீசாருக்கு அழைப்பு வந்தது, ஒரு நபர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி இரத்த வெள்ளத்தில் இருப்பதாகவும், சுயநினைவின்றி இருப்பதாகவும் கூறப்பட்டது.

இச் சம்பவத்தைத் தொடர்ந்து, 25 முதல் 30 வயதுடைய ஐந்து வங்காளதேஷ் பிரஜைகள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

“பாதிக்கப்பட்டவரின் அதே அறையில் வசிக்கும் சந்தேக நபர்களில் ஒருவர், பாதிக்கப்பட்டவரைத் தாக்கியதாக ஒப்புக்கொண்டார். தூங்கும் போது தொந்தரவு செய்ததால் கோபத்தில் தனது சக நாட்டுக்காரரை தாக்கியதாக அவர் கூறினார்,” என்று பஹ்ரின் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக என்சே பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version