Home Top Story சீனா: 2 ரெயில்கள் மோதி விபத்து – 500 பேர் படுகாயம்

சீனா: 2 ரெயில்கள் மோதி விபத்து – 500 பேர் படுகாயம்

சீனாவின் பீஜிங் மாகாணம் ஷங்பிங் நகரில் இருந்து பயணிகள் ரெயில் இன்று புறப்பட்டது. தண்டவாளத்தில் பனி படர்ந்திருந்ததால் தானியங்கி பிரேக்கிங் அமைப்பால் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. அப்போது, அதே தண்டவாளத்தில் மற்றொரு பயணிகள் ரெயில் வந்துள்ளது. அந்த ரெயில் நின்றுகொண்டிருந்த ரெயில் மீது வேகமாக மோதியது. தண்டவாளத்தில் பனி படந்திருந்ததால் பின்னால் வந்த ரெயிலில் பிரேக் பிடித்தும் ரெயில் சறுக்கிக்கொண்டு நின்றுகொண்டிருந்த ரெயில் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் 2 ரெயிலிலும் பயணித்த 500க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்தில் 102 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version