கோலாலம்பூர்: இரண்டு உடன்பிறப்புகளுக்கிடையேயான தகராறில், அவர்களில் ஒருவர் நேற்று இரவு, சுங்கை சோ, ரவாங்கில் உள்ள ஒரு வீட்டில் படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த வாக்குவாதம் வாய் தகராறாகத் தொடங்கி இறுதியில் அவர்களில் ஒருவருக்கு மரணம் ஏற்பட்டது.
சம்பவத்தை மறைக்க முயன்ற சந்தேக நபர் உயிரிழந்தவரின் சடலத்தை அவர்களது வீட்டின் பின்புறம் புதைத்துள்ளார். இருப்பினும், சம்பவம் குறித்து குடும்பஸ்தர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இன்று அதிகாலை 5 மணியளவில் கொல்லைப்புறத்தில் இருந்து உயிரிழந்தவரின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
இதற்கிடையில், கோம்பாக் மாவட்ட காவல்துறையின் செயல் தலைவர், கண்காணிப்பாளர் அரிபின் முகமட் நசீர் சம்பவத்தை உறுதிப்படுத்தினார். மேலும் அதிகாரப்பூர்வ போலீஸ் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.