Home மலேசியா திரெங்கானுவில் 2,903 பேர் வெள்ளத்தால் பாதிப்பு; 10 சாலைகள் மூடப்பட்டன

திரெங்கானுவில் 2,903 பேர் வெள்ளத்தால் பாதிப்பு; 10 சாலைகள் மூடப்பட்டன

கோலா திரெங்கானு:

இன்று மாலை 4 மணி நிலவரப்படி, திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,903 ஆக அதிகரித்துள்ளது, அவர்கள் ஆறு மாவட்டங்களில் உள்ள 53 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

டுங்கூன் மாவட்டத்தில் மிக அதிகமாக
20 நிவாரண மையங்களில் 319 குடும்பங்களைச் சேர்ந்த 1,200 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து உலு திரெங்கானுவில் திறக்கப்பட்டுள்ள 13 PPSகளில் 257 குடும்பங்களைச் சேர்ந்த 768 பேர் பாதிக்கப்பட்டவர்களும், செத்தியூவில் 85 குடும்பங்களை சேர்ந்த 302 பாதிக்கப்பட்டவர்கள் அங்கு எட்டு PPSகளில் தங்கியுள்ளனர்.

மேலும் கெமாமனிலுள்ள ஆறு நிவாரண மையங்களில் 361 பேரும், பெசூட்டில் இயங்கிவரும் ஆறு பிபிஎஸ்ஸில் 240 பேரும், மராங்கிலுள்ள ஒரு பிபிஎஸ்ஸில் 12 பேரும் தங்கியுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version