ஜோகூர் பாரு:
ஜோகூர் மாநிலத்திற்கு தொடர்மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் நான்கு மாவட்டங்களில் 7 தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஜோகூர் பாரு, கோத்தா திங்கி, மெர்சிங் மற்றும் குளுவாங் ஆகிய இடங்களில் உள்ள இந்த நிவாரண மையங்களில் தற்போது 330க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.
முன்னதாக ஜோகூரில் பல பகுதிகளுக்கு மோசமான கனமழை எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) விடுத்துள்ளது. இது ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.