Home மலேசியா வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் 3 ஆயுதப்படை வீரர்கள் பலி

வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் 3 ஆயுதப்படை வீரர்கள் பலி

அலோர் ஸ்டார்:

குருன் அருகே வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (NSE) வடக்கு நோக்கிய KM77.5 இல், இன்று (பிப் 2) மூன்று இராணுவ டிரக்குகள் உட்பட நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

30 முதல் 40 வயதுக்குட்பட்ட மூன்று இராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உறுதி செய்ததாக, குவார் செம்பெடேக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ஃபௌசி ரஸாலி தெரிவித்தார்.

“காலை 10.22 மணிக்கு தீயணைப்பு நிலையத்திற்கு அவசர அழைப்பு வந்தது, உடனே பெந்தோங் தீயணைப்பு நிலையத்திலிருந்து ஆறு தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் குவார் செம்பெடேக்கின் தீயணைப்பு வீரர்கள் குழு ஒன்று சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது.

இந்த விபத்தில் மூன்று ஆயுதப்படை வீரர் பலியாகியதுடன் லோரி ஓட்டுநர் படுகாயமடைந்ததாகவு, நான்கு வாகனங்கள் – அதாவது மூன்று இராணுவ டிரக்கள் மற்றும் ஒரு லோரி – என்பன விபத்தில் சிக்கியதை தமது குழு கண்டறிந்தது என்றார்.

படுகாயமடைந்த லோரி ஓட்டுநர் மேலதிக சிகிச்சைக்காக சுல்தானா பஹியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும், மூன்று இராணுவத்தினரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அதே வைத்தியசாலையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version