பெட்டாலிங் ஜெயா:
சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, அதாவது வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், நாடு முழுவதும் சில பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.
பேராக், சிலாங்கூர் மற்றும் மலாக்காஆகிய இடங்களில் சனிக்கிழமை பிற்பகல் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான் மற்றும் பகாங் ஆகிய இடங்களில் மதியம் மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யும் என்றும் சபா, சரவாக்கில் நாள் முழுவதும் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் X தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாகங், கெடா மற்றும் பெர்லிஸில் காலநிலை வெயிலாக இருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் மறு நாளான ஞாயிற்றுக்கிழமை பேராக், சிலாங்கூர்,கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்காவின் சில பகுதிகளில் மாலை வேளையில் மழை பெய்யலாம் என்றும், ஜோகூர், பாகங், சபா மற்றும் சரவாக்கின் பகுதிகளில் நாள் முழுவதும் மழை பெய்யும் என்றும் அது தெரிவித்துள்ளது.