Home மலேசியா ஜோகூர் சட்டசபையில் மாற்றமா ?

ஜோகூர் சட்டசபையில் மாற்றமா ?

ஜோகூர் :

ஜோகூர் மந்திரி பெசார் ஓன் ஹஃபிஸ் காஸி நிர்வாகப் பொறுப்பை ஏற்ற சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜோகூர் சட்டசபை மாற்றியமைக்கப்படவிருக்கிறது.

இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த வாரத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக மாநில மந்திரி பெசார் ஓன் ஹஃபிஸ் காஸி தெரிவித்தார்.

“அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றப்படுகின்றன என்றும், குறைந்த அளவிலேயே மாற்றம் இருக்கும் என்றும், ஜோகூர் மாநில அரசாங்கத்தை வலுப்படுத்துவதற்காக இந்த மாற்றம் இடம்பெறுகிறது,” என்றும் நேற்று ஜோகூர் அம்னோ அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு, ஓன் ஹஃபிஸ் காஸி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சென்ற புதன்கிழமை ( 7 பிப்ரவரி) சுற்றுலாத் துறையை தாம் எடுத்துக் கொள்ளப் போவதாக அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version