Home Top Story பெல்லா கொலை வழக்கு: பரபரப்பான பத்து பகாட் நீதிமன்ற வளாகம்

பெல்லா கொலை வழக்கு: பரபரப்பான பத்து பகாட் நீதிமன்ற வளாகம்

பத்து பகாட்:

பெல்லா கொலை வழக்கு இன்று காலை நீதிமன்றத்தில் மீண்டும் செவிமடுக்கப்படுகின்ற நிலையில், சமீபத்திய முன்னேற்றங்களைக் காண பொதுமக்கள் இன்று காலையிலேயே பத்து பகாட் நீதிமன்ற வளாகத்தில் ஒன்று கூடியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட 32 வயதான பெல்லா அல்லது மிலா ஷர்மிலா சாம்சூசாவின் குடும்ப உறுப்பினர்கள்; பெல்லாவின் தாய், நோரெய்னி சாலே, 55; சகோதரி, நோரிஷாம், 36; மேலும் அவரது மாமா, அல்லது அசார் ஜமீல், 55 ஆகியோர் இன்று காலையிலேயே நீதிமன்ற வளாகத்தில் காத்திருக்கிறார்கள்.

குற்றம் சாட்டப்பட்ட 24 வயதான முகமட் ஹைகல் மஹ்பூஸ், இன்று காலை 8.10 மணியளவில் போலீசாரின் கடுமையான பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு வந்தார்.

முன்னாள் தபால்காரரான முகமட் ஹைக்கால், கடந்தாண்டு டிசம்பர் 19 அன்று பெல்லாவைக் கொலை செய்ததாக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version