கூச்சிங்:
சரவாக்கில் வெள்ளம் காரணமாக தமது வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று (மார்ச் 3) காலை 8 மணி நிலவரப்படி, 392 குடும்பங்களைச் சேர்ந்த 1,497 பேராக அதிகரித்துள்ளது, இது நேற்றிரவு 367 குடும்பங்களைச் சேர்ந்த 1,193 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
சரவாக் பேரிடர் மேலாண்மைக் குழுவின் கூற்றுப்படி, அங்கு இயங்கிவரும் தற்காலிக நிவாரண மையங்களின் எண்ணிக்கையும் நேற்று 8 ஆக இருந்து இன்று 12 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சரவாக்கில் உள்பகுதியில் ஓரிரு இடங்களில் இன்று மதியம் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், மாலையில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.