Home மலேசியா முதலை தாக்கி காணாமல் போயிருக்கும் ஆடவர்

முதலை தாக்கி காணாமல் போயிருக்கும் ஆடவர்

கோத்த கினப்பாலு: சபாவின் கிழக்குக் கடற்கரையான கலபாகன் மாவட்டத்தில் முதலை தாக்கியதில் ஒருவர் காணாமல் போனார். அஸ்மாதி ஹாருன் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், கம்போங் மங்கா அருகே உள்ள ஆற்றில் மட்டி பிடிக்கும் போது முதலை  தாக்கியது.

சனிக்கிழமை (மார்ச் 9) மாலை 4.35 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு எச்சரிக்கப்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 57 வயதான நபர் இரண்டு குடும்ப உறுப்பினர்களுடன் இருந்தபோது முதலை தாக்கியது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். பின்னர் தவாவ் தீயணைப்பு நிலையத்தின் ஒரு குழு 89 கிமீ தொலைவில் அமைந்துள்ள பகுதிக்கு அனுப்பப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version