கிள்ளான்:
கிள்ளான் தாமான் செந்தோசா தேசிய வகைத் தமிழ்ப் பள்ளியில் 115 மாணவர்கள் முதலாம் ஆண்டுக்குப் பதிவு பெற்றதாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் தமிழரசு சுப்பிரமணியம் தெரிவித்தார்.
கடந்த வருடம் 100 மாணவர்கள் முதலாம் ஆண்டுக்குப் பதிவாகியிருந்த வேளையில் இவ்வாண்டின் பதிவு எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக அவர் கூறினர். மேலும் இப்பள்ளியில் இயங்கி வரும் பாலர் பள்ளியில் 25 மாணவர்களும் சிறப்பு மாணவர்களுக்கென பிரத்தியேகமாக இயங்கி வரும் சிறப்புக் கல்விக்கு 18 புதிய மாணவர்களும் பதிவு பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முதல் நாள் வருகையின் போது புதிய மாணவர்களில் பலர் பயமோ அச்சமோ இன்றி மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர். இவர்கள் அனைவரையும் மகிழ்சி்ப்படுத்தும் வகையில் கேளிக்கை விளையாட்டுகள், பல்வேறு பரிசுப் பொருட்கள் உட்பட பள்ளி உபகரணப் பொருட்கள் வழங்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தங்கராஜா கூறினார். இப்பள்ளியில் மொத்தம் 815 மாணவர்கள் கல்வி பயில்வதாக அவர் தெரிவித்தார்.