Home விளையாட்டு அர்ஜெண்டினா ஆட்டக்காரர்  ...

அர்ஜெண்டினா ஆட்டக்காரர்  ஏஞ்சல் டி மரியாவுக்கு  கொலை மிரட்டல்

அர்ஜெண்டினா நாட்டின் ரொசாரியோ நகரிலிருந்து தான் உலகக் கிண்ணத்தை வென்ற கேப்டன் வீரர் லியோனல் மெஸ்ஸியும் வந்துள்ளார்.

ஆனால் இந்த ஊர் பெரும் வன்முறைக்கும் குற்றங்களுக்கும் பெயர் பெற்றதாகும். இப்போது ஏஞ்செல் டி மரியாவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது பரபரப்பாகியுள்ளது.

ரொசாரியோவில் உள்ள குற்றங்களுக்குப் பெயர் பெற்ற கும்பல் ஒன்று ஏஞ்செல்       டி  மரியாவுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை காலை ஏஞ்செல் டி மரியாவின் வீட்டில் ஒரு துண்டுக்காகிதம்  வீசப்பட்டுள்ளது.

அதில் ஏஞ்செல் டி மரியா, குடும்பத்திற்கு கொலை மிரட்டல் செய்தி விடுக்கப்பட்டிருந்தது.

2022  உலகக் கிண்ணத்தை வென்ற அர்ஜெண்டினா அணியின் பிரதான பங்களிப்பு நட்சத்திர ஆட்டக்காரரான ஏஞ்செல் டி மரியா ரொசாரியோவுக்கு வரக்கூடாது. மீறி வந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று அந்த துண்டுக்காகிதத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

உன் மகன் ஏஞ்செலிடம் சொல்லி வை, ரொசாரியோ பக்கம் அவன் வரக்கூடாது, மீறி வந்தால் குடும்பத்தில் ஒருவரை கொலை செய்து விடுவோம்.

உன்னை கவர்னர் புல்லாரோ கூட காப்பாற்ற முடியாது நாங்கள் பொதுவாக காகித மிரட்டல் விடுப்பவர்களல்ல, புல்லட்களையும் கொல்லப்பட்டவர்களின் சடலங்களையும் அப்படியே விட்டு விட்டு வருபவர்கள் என்று  அந்த துண்டுக்காகிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அர்ஜெண்டினா போலீஸ் துறையும் வழக்கறிஞர்களும் இந்த விவகாரத்தை விசாரித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version