Home மலேசியா ஒரு வாரமாகியும் கோரப்படாமல் இருக்கும் 5 லட்சம் ரிங்கிட்

ஒரு வாரமாகியும் கோரப்படாமல் இருக்கும் 5 லட்சம் ரிங்கிட்

கோலாலம்பூர்:

டாமன்சாராவில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 500,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான ரொக்கம் ஒரு வாரத்திற்கு மேலாகியும் உரிமை கோரப்படாமல் உள்ளது என்றும் இன்றைய நிலவரப்படி, உரிமையாளர் யாரும் இன்னும் முன்வரவில்லை என்றும் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் கூறினார்.

“யாரும் இன்னும் உரிமை கோரவில்லை. மேலும்  உரிமையாளர் வருவதற்கு இன்னும் காத்திருக்கிறோம் என்று அவர் ஒரு மலாய் நாளிதழுக்கு மேற்கோள் காட்டி தகவல் தெரிவித்திருந்தார்.

மார்ச் 20 ஆம் தேதி, டாமன்சாராவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒரு காவலாளி, வாகன நிறுத்துமிடத்தில் பணம் இருந்த பையை கண்டெடுத்ததாக தகவல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version