கேமரன் ஹைலேண்ட்ஸ்:
கம்போங் ராஜா ஆறு பெருக்கெடுத்து ஓடியதால் கம்போங் கெராக் செப்பாட், தாமான் டேசா கொரினாவில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 14 வீடுகள் சேதமடைந்தன.
குறித்த சம்பவம் தொடர்பில், கேமரன் ஹைலேண்ட்ஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு அதிகாலை 1.18 மணிக்கு அவசர அழைப்பு வந்தது என்று மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயற்பாட்டு பொறுப்பதிகாரி அமீர் நூட்டின் மாட் கூறினார்.
“தீயணைப்புத் துறை மற்றும் இயந்திரங்கள் குறித்த இடத்திற்கு வந்தபோது, வெள்ளம் முற்றிலும் குறைந்துவிட்டது என்றும், இதில் மொத்தம் 14 வீடுகள் பாதிக்கப்பட்டிருந்தன என்றும், அங்கிருந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்” என்றும் அவர் கூறினார்.
மேலும் ஆற்றில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த இடத்தில் சுமார் 1.5 மீட்டர் உயரத்திற்கு நீர்மட்டம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. என்று அவர் சொன்னார்.
“கேமரன் ஹைலேண்ட்ஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் மொத்தம் 10 பேர் ஏற்கனவே அந்த இடத்தை ஆய்வு செய்து, நிலைமை முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதையும், வேறு எந்த அவசர நிலைகளும் இல்லை என்பதையும் உறுதிசெய்துள்ளனர்” என்று அவர் கூறினார்.