அதிகாரம் என்பது நம்பிக்கை. பிகேஆர் கட்சியின் 25ஆவது ஆண்டு விழாவில் கட்சி உறுப்பினர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தினார்.
அதிகாரம் என்பது மக்களுக்கு சேவையாற்றுவதற்கு வழங்கப்பட்ட ஒரு நம்பிக்கையும் வாய்ப்பும் ஆகும். மாறாக அதனை ஒரு சலுகையாக கருதலாகாது.
மறுமலர்ச்சியினல் (ரிஃபோர்மாசி) போராட்டத்தில் பிகேஆர் கட்சி உதயமானது. தவறுகளை சரி செய்து சரியான பாதையில் வைக்கும் ஒரு மாபெரும் முயற்சி ஆகும் என்று பிகேஆர் தேசியத் தலைவருமான அன்வார் தம்முடைய ஃபேஸ்புக் பதில் குறிப்பிட்டிருக்கிறார்.
கொள்கைகள் உருவாக்கத்தில் மக்களின் உரிமைக்கும் நலன்களுக்கும் முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.