Home Top Story பிரச்சாரத்தில் திடீர் உடல்நலக்குறைவு; மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

பிரச்சாரத்தில் திடீர் உடல்நலக்குறைவு; மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

வேலூர் குடியாத்தத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது நடிகர் மன்சூர் அலிகானுக்கு திடீர் என உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், அவர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் நிலையில், வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.

இதற்காக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று 50 ஆயிரம் முதல் 1 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கைத் தெரிவித்தார். மேலும், பாஜகவுக்கு எதிரானவன் என்ற கருத்தையும் தெரிவித்தார்.

சுயேட்சை வேட்பாளராக நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றார். பின்பு, மக்களிடையே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார் மன்சூர் அலிகான்.

இதனையடுத்து உடனடியாக அவர் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அவருக்கு இப்போது சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த காட்சிகள் பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பிரச்சாரம் இன்றோடு முடிவடைய இருக்கும் நிலையில், களத்தில் வேட்பாளர்கள் பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக உள்ளிட்டக் கட்சிகளோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வி அடைந்ததால், சுயேட்சையாக வேலூரில் களமிறங்கினார் மன்சூர் அலிகான். இப்போது பிரச்சாரத்திற்கு இடையில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version