தைப்பிங்:
பேராக்கின் லுமூட்டில் இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களைப் பற்றி சமூக ஊடகங்களில் இழிவான கருத்துக்களை வெளியிட்டதற்காகவும், அவதூறான கருத்துக்களை பரப்பியதற்காகவும் 35 வயது ஆடவர் ஒருவருக்கு RM23,000 அபராதம் விதிக்கப்பட்டது, அவர் அபராதத்தை செலுத்த தவறினால் மூன்று மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றத்தை ஒப்புக்கொண்ட சைபுதீன் ஷபிக் என்பவருக்கு எதிரான தண்டனையை செஷன்ஸ் நீதிபதி நபிஷா இப்ராகிம் நேற்று அறிவித்தார்.
ஆன்லைன் விற்பனையாளராக பணிபுரிந்த சைஃபுதீன், தனது செயலுக்காக வருந்துவதாகவும், “பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், ஆயுதப்படை மற்றும் எனது கருத்துகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க தனது X கணக்கை செயலிழக்கச் செய்வதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஏப்ரல் 23 அன்று மதியம் 1.15 மணிக்கு மற்றவர்களைப் புண்படுத்தும் நோக்கத்துடன் “Saifuddin Shafik@saishafik” என்ற பெயரில் உள்ள கணக்கில் X இல் இடுகையை பதிவிட்டதாக சைஃபுதீன் மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.