Home மலேசியா KKB இடைத்தேர்தல்: அவதூறான தந்திரங்களுக்கு பலியாகாதீர்: வாக்காளர்களுக்கு ரமணன் அறிவுரை

KKB இடைத்தேர்தல்: அவதூறான தந்திரங்களுக்கு பலியாகாதீர்: வாக்காளர்களுக்கு ரமணன் அறிவுரை

சுங்கை பூலோ: கோல குபு பாரு இடைத்தேர்தலில் ஆதரவையும் வாக்கையும் கோரி எதிர்க்கட்சிகள் பரப்பும் அவதூறான தந்திரங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று அங்குள்ள வாக்காளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எதிர்க்கட்சிகள் நடத்தும் அரசியல் பிரச்சாரங்களைக் கேட்கும்போது வாக்காளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் எப்போதும் உண்மைகளைச் சரிபார்க்க வேண்டும் என்று தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணை அமைச்சர் டத்தோ ஆர். ரமணன் கேட்டுக் கொண்டார்.

சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் கூறுகையில், பிரச்சார காலத்தில் பொறுப்பற்ற கட்சிகள் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது உள்ளிட்ட ஆரோக்கியமற்ற பிரச்சார முறைகளில் ஈடுபடுவார்கள். கோல குபு பாரு வாக்காளர்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்பதோடு துல்லியமான தகவல்களைக் கேட்பதும் மிகவும் முக்கியமானது. ஏனெனில் பிரச்சாரத்தின் போது பல்வேறு தகவல்கள் (எதிர்க்கட்சியிலிருந்து) வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை அவதூறுகளைக் கொண்டுள்ளன.

சிலர் மோசமான பிரச்சாரத்தில் ஈடுபட பழைய வீடியோக்களை மறுபதிவு செய்யலாம். நாங்கள் தூய்மையான பிரச்சாரத்தை விரும்புகிறோம். மக்கள் நம்பகமான செய்தி ஆதாரங்களை நம்பியிருக்க வேண்டும் என்று அவர் இன்று சுங்கை பூலோ நாடளுமன்ற சேவை மையத்தில் அமானா இக்தியார் மலேசியா  உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பின்போது செய்தியாளர்களிடம் கூறினார்.

KKB இடைத்தேர்தலில் நேற்று வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. பக்காத்தான் ஹராப்பான் (PH), பெரிக்காத்தான் நேஷனல் (PN), பார்ட்டி ராக்யாட் மலேசியா (PRM) மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளர் இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. PH சார்பில் வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் Nga Kor Mingஇன் முன்னாள் செய்திச் செயலாளரான பாங் சாக் தாவோ 31, PN சார்பில் உலு சிலாங்கூர் பெர்சத்துவின் செயல் பிரிவுத் தலைவர் கைருல் அஸ்ஹாரி சவுத், PRMஇன் ஹபிசா ஜைனுதீன்  மற்றும் Nyau Ke Xin (சுயேச்சை) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இடைத்தேர்தல், அதன் தற்போதைய டிஏபியைச் சேர்ந்த லீ கீ ஹியோங் 58, புற்றுநோயால் மார்ச் 21 அன்று காலமானதால், தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதியும், வாக்குப்பதிவு மே 11ஆம் தேதியும் நடைபெறுகிறது. ஹரி ராயா திறந்த இல்ல கொண்டாட்டத்தின் போது பல்வேறு இனக்குழுக்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் அதே வேளையில் தொகுதியில் உள்ள மக்களுடன் இணைவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்தது என்று ரமணன் கூறினார். சுங்கை பூலோ தொகுதியில் கல்லறை பராமரிப்பாளர்கள், சவ வாகன ஓட்டுநர்கள் மற்றும் மசூதிகள் மற்றும் சூராவ் பராமரிப்பாளர்கள் உட்பட 200 இறுதிச் சடங்கு நிர்வாக ஊழியர்களுக்கு நன்கொடைகளை  ரமணன் வழங்கினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version