கஷ்டங்கள், ஏமாற்றங்கள் பறந்துபோகும்
(அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம் 4 பாதங்கள், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் வரை)
அன்பான கும்ப ராசிக்காரர்களுக்கு கடந்த ஓராண்டு காலமாக குருபகவான் ராசிக்கு மூன்றாமிடத்தில் வீற்றிருந்து கொண்டு பல வகையில், பல வழிகளில் படுத்தி வந்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது எந்த ஒரு காரியமும் உருப்படியாக நடந்து முடியாமல் பாதியில் நின்றுபோனது என்றுதான் சொல்ல வேண்டியதாகிறது.
பலவிதமான தடங்கல்கள், தடைகள், முட்டுக்கட்டைகள் வந்து சேர்ந்தது என்றும் சொல்ல வேண்டும். தொட்டதெல்லாம் பிரச்சினைகளிலும் தொந்தரவுகளிலும் போய் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்பட்டதுதான் மிச்சம். பல விஷயங்கள் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது என்றுதான் சொல்லவேண்டும்.
உடல்நலத்திலும்கூட அடிக்கடி ஏதாவது குறைபாடுகள் ஏற்பட்டு, சிறிதளவு வைத்தியச் செலவுகள் வந்து சேர்ந்ததென்றும் சொல்லத்தான் வேண்டியதாகிறது. மேலும் கையில் இருந்த பணம் முழுவதும் காலியானதுடன், கடன் வாங்கி வேற செலவுகள் செய்யவேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் வந்து சேர்ந்ததென்றும்கூட சொல்லவேண்டும்.
கையிலிருந்த நல்ல வேலையும் கையை விட்டுப்போனது, வேறு வேலை இன்னும் கிடைக்கவே இல்லை என்றும்தான் சொல்ல வேண்டும்.
எல்லா விஷயங்களும் கிட்டத்தில் வந்து தட்டிப் போனதுதான் கண்ட பலன். ஒரு சிலருக்கு அரசாங்கத்திலிருந்தும்கூட பிரச்சினைகள், சில தொந்தரவுகள், கெடுபிடிகள், சிக்கல்கள் தேடி வந்து சேர்ந்ததென்றும் தண்டத்துக்கு அபாரதம் செலுத்த வேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் வந்துபோனது என்றும் சொல்ல வேண்டியதாகிறது.
அரசியலில் உள்ளவர்களுக்கு இருந்த பட்டம், பதவியும் பறிபோனதுதான் மிச்சம். மேலும் கடந்த 3ஆம் இட குருவின் காலத்தில் வருமானம் குறைவாகவும் செலவுகள் அதிகமாகவும் காணப்பட்டு வந்தது என்றுதான் சொல்ல வேண்டியதாகிறது.
எந்தவிதமான சுபநிகழ்ச்சிகளோ நல்ல நிகழ்ச்சிகளோகூட கிட்டத்தில் வந்து தட்டிப்போனதுதான் கண்ட பலன். குடும்பத்தில் குழப்பங்கள், மன உளைச்சல்கள், மனக்கவலைகள் அதிகமாகக் காணப்பட்டு வந்ததென்றும் சொல்ல வேண்டும். மேலும் பெண்களால் சில சிக்கல்கள், சில பிரச்சினைகள், தண்டச் செலவுகள் தேடிவந்து சேர்ந்ததென்றும் சொல்லத்தான் இடமிருக்கிறது.
ஆனால் இவை யாவுமே வரும் 1.5.2024 முதல் குருபகவான் பெயர்ச்சி யாகி ராசிக்கு 4ஆம் இடத்தில் வந்து சேர்வதிலிருந்து மிகவும் சிறப்பான காலகட்டம் ஆரம்பமாகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
அதாவது இப்போது 4ஆம் இடத்திற்கு (ராசிக்கு) வந்திருக்கும் குரு பகவான் அங்கிருந்து 8ஆம் இடம், 10ஆம் இடம், 12ஆம் இடம் ஆகிய ஸ்தானங்களைப் பார்க்கின்றபடியால் மேலும் பல வகையில் முன்னேற்றமும் சிறப்பான ஒரு போக்கும்தான் காணப்பட்டு வருவதற்கு வாய்ப்புள்ளது.
அதாவது இதுவரைக்கும் நீங்கள் பட்ட கஷ்ட, நஷ்டங்களுக்கெல்லாம் இபோது விமோசனம் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. இதுவரையில் காணப்பட்டு வந்த சிக்கல்கள், பிரச்சினைகள், குறைபாடுகள் அனைத்தும் முற்றிலுமாக நிவர்த்தியாகி மிகவும் ஆரோக்கியமாகவே காணப்பட்டு வருவதற்கும் அதிகப்படியான வாய்ப்பிருக்கிறது.
காணப்பட்டு வந்திருக்கும் மனக்கவலைகள், மனக்குழப்பங்கள், மன உளைச்சல்கள் மறைந்து மகிழ்ச்சி காணப்பட்டு வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது. மேலும் இந்தக் காலகட்டத்தில் வேலை தேடும் நபர்களுக்கு உடனடியாக வேலை கிடைப்பதற்கும் ஏற்கெனவே உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உயர்வு வந்து சேர்வதற்கும் அதிகப்படியான வாய்ப்பிருக்கிறது.
இந்தச் சமயத்தில் ஒரு சிலர் சொந்தத் தொழில், வியாபாரம் ஆரம்பிப்பதற்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் வந்து சேரும் வாய்ப்புள்ளது. ஒரு சிலருக்கு இந்தச் சமயத்தில் புதிதாக வண்டி, வாகனம் வாங்குவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
ஏதாவது ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றியடைவதற்கும் அதிகப்படியான வாய்ப்புள்ளது. இந்தக் காலகட்டத்தில் இதர கிரக நிலவரங்களும் சாதகமான இடங்களிலேயே வீற்றிருப்பதால் தொட்டது துலங்குவதற்கும் நினைத்தது நினைத்தபடி நடந்தேறுவதற்கும் உடன் கைக்கு வந்து சேர்வதற்கும் எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து நல்ல செய்திகள், மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேர்வதற்கும வாய்ப்பு உண்டு.
மேலும் இதுவரை தடங்கலாகி வந்திருந்த சுபநிகழ்ச்சிகள், நல்ல நிகழ்ச்சிகள் இப்போது நல்லபடியாக நடந்தேறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. இந்த 4ஆம் இட குருவால் நான்கு பக்கத்திலிருந்தும் நல்லதே நடப்பதற்குத்தான் அதிக வாய்ப்பிருக்கிறது.
இப்போதுள்ள கிரக நிலவரங்களின்படி பார்க்கும்போது வெளிநாட்டுப் பிரயாணம் மேற்கொள்வதற்கும் அதனால் ஆதாயம் அடைவதற்கும் வாய்ப்புள்ளது. வராமல் இருக்கும் பணம், வர வேண்டிய பணம், பழைய பாக்கிகள் தேடி வந்து சேர்வதற்கும் சந்தர்ப்பமிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
மேலும் இந்தச் சமயத்தில் அரசாங்கத்திலிருந்து ஆக வேண்டிய சமாச்சாரங்கள் எதுவானாலும் உடனுக்குடன் சாதகமாகவும் வெற்றியுடனும் நடந்து முடிவதற்கும் அதிக வாய்ப்பிருக்கிறது.
இப்போது அரசாங்கத்திலிருந்து சலுகைகள், உதவிகள் கிடைப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. வழக்கு, விசாரணை ஏதாவது இருப்பின் இந்தச் சமயத்தில் வெற்றி நிச்சயம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சிலருக்கு பூர்வீகச் சொத்து ஏதாவது தேடி வந்து சேர்வதற்கும் சந்தர்ப்பமிருக்கிறது. நீண்ட நாளைய ஆசை, கனவு நிறைவேறுவதற்கும் நனவாகுவதற்கும் அதிகப்படியான வாய்ப்பிருக்கிறது.
இவ்வாறாக எல்லா வகையிலும் நல்லதாகவே நடந்து வந்து கொண்டிருக்கும் வேளையில் பிறகு வரும் 8.10.2024 முதல் 3.2.2025 வரையில் உள்ள ஒரு 4 மாதத்திற்கு 4ஆம் இட குருபகவான் வக்கிர சஞ்சாரம் செய்ய இருக்கின்றபடியால் இந்தக் காலகட்டம் கொஞ்சம் சிக்கலாகவும் பிரச்சினையாகவும் காணப்பட்டு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.
மேலும் இந்தக் காலகட்டத்தில் ஒரு மந்தமாகவும் குழப்பமாகவும் மன உளைச்சலாகவும் மனக்கவலையாகவும் காணப்பட்டு வருவதற்குத்தான் வாய்ப்பிருக்கிறது. ஆனால் பிறகு வரும் 4.2.2025 முதல் 13.5.2025 வரைக்கும் உள்ள மூன்றரை மாத காலத்திற்கு குருபகவான் வக்கிர நிவர்த்தியாகி நேர்கதியில் சஞ்சரிக்கும் காலமாதலால் இந்தக் காலகட்டம் மிகவும் சிறப்பாகவும் யோகமாகவும் காணப்பட்டு வரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு 3,6,8 அதிர்ஷ்ட எண்கள். புதன்கிழமை, சனிக்கிழமை அதிர்ஷ்டக் கிழமைகள். மரகதம், நீலக்கல் அதிர்ஷ்டக் கல். பச்சை, நீலம் அதிர்ஷ்ட நிறங்கள். இஷ்ட தெய்வம் ஸ்ரீ ஐயப்பன். வணங்கவேண்டிய கிரகம் சனி பகவான். பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடுவது நன்று. ஐயப்ப தரிசனம் செய்வது நல்லது.
நாளை மீனம்