Home உலகம் கொரோனா பாதிப்பால் சீனா தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் ஊரடங்கு

கொரோனா பாதிப்பால் சீனா தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் ஊரடங்கு

சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவத்தொடங்கி உள்ளது.

இந்நிலையில், தலைநகர் பெய்ஜிங்கில் 2 பேர் உள்பட அந்த நாட்டில் புதிதாக 10 பேருக்கு தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

முடிவுக்கு வந்துவிட்டது கொரோனா என கருதப்பட்டு வந்த நிலையில், புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

56 நாட்களுக்கு பிறகு, தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று முன்தினம் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் பீஜிங்கில் நேற்று மேலும் 2 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்த பீஜிங்கில் அதிகாரிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சீன தலைநகரில் உள்நாட்டில் பரவிய மேலும் ஆறு கொரோனா பாதிப்புகளை தேசிய சுகாதார ஆணையம் (என்.எச்.சி) தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து பெய்ஜிங்கில் உள்ள அதிகாரிகள் நகரத்தில் உள்ள பெரிய மொத்த சந்தையை தற்காலிகமாக மூடினர்.

பெய்ஜிங்கில் புதிதாக நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 2 பேர் பெங்டாய் மாவட்டத்தில் உள்ள சீன இறைச்சி உணவு ஆராய்ச்சி மையத்தின் ஊழியர்கள் ஆவார்கள். 2 நாளில் 3 பேருக்கு பெய்ஜிங்கில் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது, ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

உணவு சந்தையில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.அவர்கள் ஜிங்ஷென் கடல் உணவு சந்தையையும் மூடி, பெய்ஜிங்கின் மொத்த உணவு சந்தைகள் அனைத்திற்கும் உணவு மற்றும் சுற்றுச்சூழல் மாதிரிகளை சோதிக்க உத்தரவிட்டனர்.

ஆறு புதிய உள்நாட்டு கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகிய பின்னர் பெய்ஜிங்கில் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version