Home மலேசியா தலைமைக்கே விசுவாசம் – காப்பார் தொகுதி கெஅடிலான் அறிவிப்பு

தலைமைக்கே விசுவாசம் – காப்பார் தொகுதி கெஅடிலான் அறிவிப்பு

கெஅடிலான் காப்பார் தொகுதி கட்சி தொண்டர்களிடம் வசமே உள்ளது என்று அத்தொகுதியின் துணைத்தலைவரும் கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினருமான மதுரை வீரன் மாரிமுத்து தெரிவித்தார்.

தொண்டர்களால் வியர்வை சிந்தி வளர்க்கப்பட்ட கட்சி,சில தலைவர்கள் நமக்கு பிடிக்காமல் இருக்கலாம் அதற்காக மக்கள் சேவையை முன்னிருத்தி உருவாக்கப்பட்ட கட்சியை விட்டு வெளியேறுவது கட்சிக்குச் செய்யும் துரோகம் என்றும் காப்பார் தொகுதியைப் பொறுத்தவரை அது இன்னமும் உண்மையான தொண்டர்கள் வசமே உள்ளதாகவும் அவர் கூறினார்.

புதிய தற்காலிகத் தலைவர் கோ பூன் பொக், கட்சியின் பெண்கள் தலைவியான திருமதி லெட்சுமி காப்பார் தொகுதி நிலைத்திருக்க கடுமையாக போராட வேண்டும்.

காப்பார் தொகுதியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் மதுரைவீரன் தம்மால் இயன்ற அனைத்து சேவைகளையும் இனபாரபட்சமின்றி செய்து வந்துள்ளதாகவும் இனிமேல் தன் சேவையை இன்னும் சிறப்பாக செயல்படுத்த விருப்பதாகவும், யாருக்கும் நான் விலைபோக மாட்டேன் என்றும் கூறினார்.

சமீபகாலமாக கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் மற்றும் குறைப்பாடுகள் காரணமாக கெஅடிலான் கட்சியின் தலைவராக இருந்த செமந்தா சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில துணை சபா நாயகருமான டாக்டர் டரோயா அல்விஸ் , அத்தொகுதியின் துணைத்தலைவரும் ஹிண்ட்ராஃப் முன்னாள் போராட்ட வீரருமான வசந்தகுமார் கெஅடிலான் கட்சியில் இருந்து வெளியேறுவதாகவும் தங்களை சுயேச்சைகளாகவும் அறிவித்துக்கொண்டனர் என்பதும் குறிப்பிடதக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version