Home Hot News கடத்தப்பட்ட டத்தோஸ்ரீ குடும்பத்தினரிடம் 5 கோடி சிங்கப்பூர் டாலர் பிணைப்பணம் கேட்டனர் – டத்தோ பட்ஸ்லி...

கடத்தப்பட்ட டத்தோஸ்ரீ குடும்பத்தினரிடம் 5 கோடி சிங்கப்பூர் டாலர் பிணைப்பணம் கேட்டனர் – டத்தோ பட்ஸ்லி தகவல்

புக்கிட் ஆமான் குற்றபுலணாய்வு துறையும் சிலாங்கூர் மாநில குற்றபுலணாய்வு துறையும் மேற்கொண்ட நடவடிக்கையில் ஒரு இந்திய ஆடவரை கைது செய்து அவரிடம் புலன் விசாரணை மேற்கொண்டு மேலும் 6 ஆடவர்களை கைது செய்தனர் என்று சிலாங்கூர் மாநில சிஜடி தலைவர் டத்தோ பட்ஸ்லி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் கடந்த 10ஆம் தேதி காலை 10.30 மணியளவில் உடல்பயிற்சி செய்து கொண்டிருந்த டத்தோஸ்ரீ ஆறுமுகம் அவரை கடத்தப்பட்டு ரவாங்கில் உள்ள கம்போங் கோஸ்கான் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைக்கப்பட்டதாக டத்தோ பட்ஸ்லி தெரிவித்தார்.

அதன் பிறகு டத்தோஸ்ரீ குடும்பத்தாரிடம் 5 கோடி சிங்கப்பூர் டாலர் பிணைப்பணம் கேட்டதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தப்பட்டு அன்றில் இருந்து 3 அல்லது 4 நாளில் கொலை செய்யப்பட்டு அவர் பத்து 27 ஜாலான் ரவாங் பெஸ்தாரி ஜெயா உள்ள புதர் ஒன்றில் விசப்பட்டார் என்று டத்தோ பட்ஸ்லி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட ஏழு ஆடவர்களில் 5 இந்திய ஆடவர்கள் ஒரு மலாய் ஆடவர் மற்றும் ஒரு வங்காள தேசிய ஆடவர் ஆவார். இவர்கள் அனைவருக்கும் 30 முதல் 50 வயது உடைவர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version