ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தூக்கிலிடப்பட்ட கைதிகளிடமிருந்து திசு எடுப்பதை நிறுத்திய பின்னர், நன்கொடையாளர்களின் பற்றாக்குறையை சமாளிப்பதற்கும், சட்டவிரோத்த்தைத் தடுப்பதற்கும் உறுப்பு தான விதிகளில் சீனா மாற்றங்களைசெய்யத் திட்டமிட்டுள்ளது.
அதன் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்ட வரைவு விதிகளில் இறந்த உறவினர்களின் உறுப்புகளைத் தானம் செய்ய மக்களை அனுமதிப்தைக் குறிபிட்டிருந்தது.
உறுப்புகளுக்காகக் குழந்தை கடத்தலை சீனா தடுக்க முற்படுவதால், வாழும் சிறார்களிடமிருந்து உறுப்புகளை எடுத்துக்கொள்வதையும் தடுத்திருக்கின்றனர்.
2015 ஆம் ஆண்டில் தூக்கிலிடப்பட்ட கைதிகளிடமிருந்து உறுப்புகளைப் பெறுவதற்கான சர்ச்சைக்குரிய நடைமுறையை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர், சீனாவில் நன்கொடையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
சீர்திருத்தங்கள் மூலம் நன்கொடையாளர்களின் சட்ட உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தொடங்கியிருக்கிறது சீனா. ஆனால், மரணத்திற்குப் பிறகு ஓர் உடலைச் சிதைப்பது என்ற சீனாவின் கலாச்சார உணர்திறன் காரணமாக நன்கொடைகளை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று நிபுணத்துவம் பெற்ற பெய்ஜிங்கைச் சேர்ந்த வழக்கறிஞர் வாங் பிங் கூறினார்.
இதற்கான வரைவுச் சட்டம் மாத இறுதி வரை பொதுமக்கள் கருத்துக்கு கிடைக்கும். சீனாவின் பாராளுமன்ற விவாதத்திற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
2007 ஆம் ஆண்டில் பெய்ஜிங் முதன்முதலில் உறுப்பு தானங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்களை இயற்றியது, ஆனால், தெளிவான தண்டனைகள் , அமலாக்கங்கள் இல்லாததால் உறுப்புதானம் கறுப்புச் சந்தைக்கு வழிவகுத்தது.
கறுப்புச்சந்தையில் சிறுநீரகத்தை சுமார் 50,000 (350,000 யுவான்) டாலருக்கு வாங்க முடியும், கடந்த ஜூலை மாதம் பிரிட்டனின் சீனத் தீர்ப்பாயத்தின் ஓர் அறிக்கையின்படி- கட்டாய உறுப்புதானம் குறித்து தொண்டு நிறுவனம் ஒன்று சுய விசாரணைகளை மேற்கொண்டது.
சீனாவில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை உத்தியோகப்பூர்வ நன்கொடையாளர்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது, என்றும் கூறப்படுகிறது. இந்தத் திருத்தங்களில் உறுப்பு கடத்தல் அல்லது சட்டவிரோத மாற்று சிகிச்சையில் ஈடுபட்ட தனிநபர்கள் நிறுவனங்களுக்கு அபராதம் , பிற தண்டனைகள் வழங்க வழிசெய்யும் வகையில் சீர்திருத்தம் அமையவிருக்கிறது.
மீறுபவர்கள் சட்டவிரோத ஆதாயங்களவிட எட்டு முதல் 10 மடங்கு மதிப்புள்ள அபராதமும், மருத்துவர்கள் தங்கள் மருத்துவ உரிமத்தையும் இழக்க நெரிடும் என்றும் வரைவு கூறுகிறது.
புத்தகங்களுக்கு நீண்ட காலமாக தண்டனைகள் உள்ளன, ஆனால் மாற்று மருத்துவமனைகள் தொடர்கின்றன. இதைத்தடுக்கும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது.
சீனாவின் மருத்துவ முறைகேடுகள் குறித்தவற்றில், நிபுணத்துவம் பெற்ற ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மத்தேயு ராபர்ட்சன் இதனைக்கூறினார்.