Home மலேசியா உண்மை, உழைப்பு, நேர்மைக்கு மகளிர்

உண்மை, உழைப்பு, நேர்மைக்கு மகளிர்

 

உண்மை, உழைப்பு, உயர்வு என்றே,
உலகம் கூறிடும் உன்னத வார்த்தை!
பெண்மை அவளே பெருந்தவச் செல்வி,
உண்மை இதுதான் உணர்ந்தோர் வாக்கு!
நன்மை ஆயிரம் நயம்படச் செய்வர்,
இன்மை ஆயினும் இதழ்நகை புரிவர்!
பெண்மைக் கீடு பெருநிலம் உண்டோ,
பெண்மை இன்றேல் பேருல கில்லை!

 

கா.இளமணி

மகளிர் தின சிறப்புக் கவிதை

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version