பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் ஞாயிற்றுக்கிழமை (மே 9) 3,733 புதிய கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளன. இது மொத்தம் 440,677 தொற்று சம்பவங்களாக உள்ளது என்று டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
சுகாதார தலைமை இயக்குநர் ஜெனரல் டூவிட் செய்துள்ளார். சிலாங்கூரில் 1,278 நோய்த்தொற்றுகள் அதிகம் உள்ளன. அதைத் தொடர்ந்து சரவாக் (454) மற்றும் ஜோகூர் (365).
மற்ற மாநிலங்களில் கோலாலம்பூர் (338), பினாங்கு (280), கிளந்தான் (254), நெகிரி செம்பிலான் (205), கெடா (176), பஹாங் (100), பேராக் (80), மலாக்கா (66) , சபா (61), தெரெங்கானு (49), புத்ராஜெயா (20), லாபுவான் (ஆறு), பெர்லிஸ் (ஒருவர்).
கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 416 பேர் ஐசியுவில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் அதில் 216 பேர் வெண்டிலேட்டர் ஆதரவில் உள்ளனர்.