காட்டுக்குள் கழுக்குப் பார்வை
குன்னுார்:
வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து சமையல் செய்து, அனுமதி இல்லாமல் ‘ட்ரோன்’ இயக்கியவர்கள் குறித்து, வனத்துறை விசாரித்து வருகிறது.
நீலகிரி மாவட்டம், குன்னுார், கோத்தகிரி உட்பட பல்வேறு காப்பு காட்டுக்குள், ஊரடங்கு காலத்தில் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளனர். மலை உச்சியில் சமையல் செய்து, அதை ‘ட்ரோன் கேமரா’ வாயிலாக பதிவு செய்து, சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி உள்ளனர்.
தடையுள்ள பகுதியில் அத்துமீறி சென்று, வன விலங்குகளுக்கு தொந்தரவு செய்யும் வகையில் ட்ரோன் இயக்கியது குறித்து வனத்துறை விசாரித்து வருகிறது.
கோத்தகிரி ரேஞ்சர் சரவணன் கூறுகையில், ”ஊரடங்கு காலத்தில் அத்துமீறி, ‘ட்ரோன்’ இயக்கிய இடம் சோலுார்மட்டம் வனப்பகுதியா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார் அவர்.