Home இந்தியா யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

வண்டலூர் பூங்காவில் வெளியானது முடிவு!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள யானைகளுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா 2ஆவது அலை விலங்குகளையும் விட்டுவைக்கவில்லை. முன்னதாக வண்டலூர் பூங்காவில் 11 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 3ஆம் தேதி உறுதியானது. அதில் இரண்டு சிங்கங்கள் உயிரிழந்தன. தொற்று ஏற்பட்ட சிங்கங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பூங்காவில் உள்ள யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்ய்பபட்டது. அதன்படி கடந்த 16ஆம் தேதி பூங்காவில் வளர்க்கப்படும் பிரகுர்தி , ரோகிணி என்ற இரு பெண் யானைகளின் தும்பிக்கை , ஆசனவாய் பகுதிகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன.

அந்த மாதிரிகள் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்குகள் நோய் பகுப்பாய்வு நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அதேபோல, பீஷ்மர் என்ற வெள்ளைப் புலியின் மாதிரியும் கடந்த 25ஆம் தேதி ஆய்வுக்காக அனுப்பபட்டது. இந்த மாதிரிகளின் முடிவுகள் நேற்று வெளியாகின.

அதில், யானைகள், வெள்ளைப் புலி ஆகியவை கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளதாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version